மட்டக்களப்பில் தொற்று நீக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாநகரசபை உறுப்பினர்கள்! -
நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் நாளை காலை மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதால் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற நிலையில், பொது மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மருந்து தெளிக்கும் கருவிகளை சுமந்துசென்று மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளை மாநகரசபை ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டனர்.
நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பேரூந்து நிலையங்கள்,பொதுச்சந்தைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் தொற்று நீக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாநகரசபை உறுப்பினர்கள்! -
Reviewed by Author
on
April 01, 2020
Rating:

No comments:
Post a Comment