மன்னாரில் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் பெறும் ஒரு சில மொத்த வியாபாரிகள்-விலை குறைக்கப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக முறைப்பாடு....
இலங்கை முழுவதும் 'கொரோனா' அச்சம் காரணமாக ஊரடங்கு சட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள சில மொத்த வியாபாரிகளினால் இன்னும் கொள்ளை இலாபம் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்யாமல் வியாபார நிலையங்களின் களஞ்சிய பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
65 ரூபா நிர்ணய விலை அமுல் படுத்தப்பட்ட பருப்பை மன்னாரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் சட்ட நடை முறைகளில் இருந்து தப்புவதற்காக பற்றுசீட்டுகளில் பருப்பிற்கு பதிலதாக 'கட்டை'என்று குறிப்பிட்டு விற்பனை செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே பேன்று 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட மீன் ரின் போன்ற அத்தியாவசிய விலை குறைக்கப்பட பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த வியாபரிகள் பகிரங்கமாக இவ் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குறித்த விலை தொடர்பாக கேள்வி எழுப்பும் மக்களுடன் முறையற்ற விதமாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் திடீர் விலை குறைப்பு விற்பனையாளர்களை பாதிக்கின்றது. அரசங்கம் விலைகளை அதிகரிக்கும் போது மாத்திரம் இவ்வாறான மொத்த வியாபரிகள் உடனடியாக விலைகளை அதிகரித்து இலாபம் சம்பாதிக்கும் போது இவ்வாறான அவசர நிலமையின் போது விலை குறைப்பு செய்யும் போது ஏன் விலை குறைப்பதில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் அவர்களுக்கான விற்பனை நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற கொள்வனவு பாஸ் திட்டத்தை நிறுத்தி வைக்கவும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன் அரசாங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்ட சில பொருட்களை விற்பனை செய்யாமல் வியாபார நிலையங்களின் களஞ்சிய பகுதிகளில் பதுக்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
65 ரூபா நிர்ணய விலை அமுல் படுத்தப்பட்ட பருப்பை மன்னாரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் சட்ட நடை முறைகளில் இருந்து தப்புவதற்காக பற்றுசீட்டுகளில் பருப்பிற்கு பதிலதாக 'கட்டை'என்று குறிப்பிட்டு விற்பனை செய்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே பேன்று 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட மீன் ரின் போன்ற அத்தியாவசிய விலை குறைக்கப்பட பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த வியாபரிகள் பகிரங்கமாக இவ் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குறித்த விலை தொடர்பாக கேள்வி எழுப்பும் மக்களுடன் முறையற்ற விதமாக நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் திடீர் விலை குறைப்பு விற்பனையாளர்களை பாதிக்கின்றது. அரசங்கம் விலைகளை அதிகரிக்கும் போது மாத்திரம் இவ்வாறான மொத்த வியாபரிகள் உடனடியாக விலைகளை அதிகரித்து இலாபம் சம்பாதிக்கும் போது இவ்வாறான அவசர நிலமையின் போது விலை குறைப்பு செய்யும் போது ஏன் விலை குறைப்பதில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் அவர்களுக்கான விற்பனை நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகின்ற கொள்வனவு பாஸ் திட்டத்தை நிறுத்தி வைக்கவும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மன்னாரில் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் பெறும் ஒரு சில மொத்த வியாபாரிகள்-விலை குறைக்கப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்துள்ளதாக முறைப்பாடு....
Reviewed by Author
on
April 08, 2020
Rating:

No comments:
Post a Comment