ஐபிஎல் போட்டியை நடத்த தயாராக இருக்கிறோம்! இந்தியாவிற்கு உதவும் இலங்கை -
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஏப்ரல் 14-ஆம் திகதிக்கு பின் என்று ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின் இந்தியாவில் வரும் 3-ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், காலவரையின்றி ஐபிஎல் தொடர் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் அடுத்த சில நாட்களில் கொரோனா அச்சுறுத்தல் தளர்ந்தால், இலங்கையின் முன்மொழிவை இந்தியா ஆராயும் என்று இலங்கைபா செய்தித்தாளிடம் பேசிய இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா கூறியுள்ளார்.
மேலும், ஐபிஎல் நிறுத்தப்பட்டால், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் பங்குதாரர்கள் 500 மில்லியனுக்கும் அதிகமான இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், 2009-ல் தென்னாப்பிரிக்காவில் செய்ததைப் போல வேறொரு நாட்டில் லீக் நடத்துவது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
அவர்களிடமிருந்து இந்த முன்மொழிவுக்கு நாங்கள் முன்னேறினால், இலங்கை சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்
இலங்கையில் ஐ.பி.எல் நடந்தால், அது நாட்டிற்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் அதிக பணப்புழக்கத்தைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.
ஐபிஎல் தொடர் நடப்பது கேள்விகுறியாக இருந்த நிலையில், இலங்கை உதவுவதாக கூறியுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஐபிஎல் போட்டியை நடத்த தயாராக இருக்கிறோம்! இந்தியாவிற்கு உதவும் இலங்கை -
Reviewed by Author
on
April 17, 2020
Rating:

No comments:
Post a Comment