ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் எமது குடும்பத்திற்கு தொடர்பில்லை – ரிசாட் பதியூதீன் -
தமது சகோதரர் ரியாட் பதியூதீன் அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் உருவாகுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அதற்கு உதவுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராகவே செயற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அவ்வாறு செயற்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது அரசியல் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தமது சகோதரரை தொடர்புபடுத்தி குற்றம் சுமத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விசாரணைகளுக்கு தாமும் தமது சகோதரரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு சில நிமிடங்கள் முதல் சில இனவாத ஊடகங்கள் இந்த தாக்குதல் சம்பவத்துடன் ரியாட் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தி வருவதாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் சில அரசியல் தரப்புக்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தினால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை குழுக்கள் மூலம் விசாரணை நடத்தி தாம் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என தற்போது பதவி வகிக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை வழங்கியிருந்தார் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் எமது குடும்பத்திற்கு தொடர்பில்லை – ரிசாட் பதியூதீன் -
Reviewed by Author
on
April 16, 2020
Rating:

No comments:
Post a Comment