நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம்.....
நுவரெலியா மாவட்டத்தில் இன்று முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது....
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது..
அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதை தவிர்ந்த நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் , எதிர் வரும் ஜீன் 4ஆம் மற்றும் 5ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம்.....
Reviewed by Author
on
May 30, 2020
Rating:

No comments:
Post a Comment