மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளது .........
2020
தேர்தலானது மிகவும் இக்கட்டான சூழ்னிலையில் நடை பெற்றுவருகின்றது இந்த
தேர்தல் நடை பெறும் காலப்பகுதியில் கோட்டபாய ராஜபக்ஸவே ஜனாதிபதியாக உள்ளார்
அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வர அதிகம் வாய்புள்ளதாக யாழ்
மாவட்ட வேட்பாளரும் புளொட் இயக்கத்தின் தலைவருமான சித்தாதன்
தெரிவித்துள்ளார்.....
தமிழ்
தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் கட்சி சார்பாக 2020 ஆண்டு
பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள புளொட்
வேட்பாளர்களின் மன்னார் மாவட்டத்திற்கான தேர்தல் இணைப்பு அலுவலகமானது இன்று
காலை 11 மணியளவில் பனங்கட்டுகொட்டு பகுதியில் வைபவரீதியாக திறந்து
வைக்கப்பட்டது அதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்.
இம்
முறை தேர்தலில் மிக பெரும்பான்மையில் அவர்கள் வருவார்கள் மூன்றில் இரண்டு
பெறும்பான்மையை பற்றி கதைத்தாலும் அவர்கள் 120-130 வரையான ஆசங்களில்
வருவதாக நம்புகின்றார்கள் இருந்தாலும் அவர்கள் அரசியல் அமைப்பு
சீர்திருத்தம் 19வது திருத்ததை இல்லாமல் செய்வது அதே நேரத்தில் அவருடைய
கட்சியில் உள்ள விமல் வீரவம்ச உதயன் கம்பின் பொல போன்றவர்கள் 13 ஆம்
திருத்த சட்டத்தையும் இல்லாமல் ஆக்கும் நோக்கத்துடன் இருப்பவர்கள் .....
ஆனாலும் இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது,,,,
இப்பிடியான
சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கில் பல
கட்சிகள் வடக்கு கிழக்கில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள் அரசாங்கத்தை
சேர்ந்த கட்சிகளே பல கட்சிகளாக தேர்தலில் வாக்கு கேட்கின்றார்கள் இப்படி
இருக்கும் போது அவர்களின் உறவுகள் முலமே வாக்குகளை பிரித்து விடலாம் என்று
ஏனையவர்கள் நினைக்கின்றார்கள்...
எனவே மக்கள் இதை எல்லம் மனதில் கொண்டும் கடந்த காலத்தை கொண்டும் வாக்களிக்க வேண்டும் என தெரிவுத்துள்ளார்...
குறித்த
நிகழ்வில் புளொட் கட்சியின் தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான
திரு.சித்தார்தன் மற்றும் புளொட் கட்சி சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில்
போட்டியிடும் திரு.சிவலிங்கம் அவர்கள் முன்னால் மாகாண சபை உறுப்பினர்
லிங்கநாதன் கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்..
மகிந்த ராஜபக்ஸவே பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளது .........
Reviewed by Author
on
July 09, 2020
Rating:

No comments:
Post a Comment