அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து - ஒருவர் படுகாயம்...

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை கிளிநொச்சி நோக்கி மரக்கறிப் பொருட்களை ஏற்றியவாறு பயணித்த கப் வாகனம் ஒன்றே விபத்திற்குள்ளானது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியை விட்டு விலகியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது....



கிளிநொச்சி நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து - ஒருவர் படுகாயம்... Reviewed by Author on July 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.