இதுவரை கொரோனாவால் மரணம் பதிவாகாத உகண்டாவில் முதலாவது மரணம் பதிவானது....
இதுவரை இந்நாட்டில் கொரோனா தொற்றினால் மரணம் பதிவாகாத நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நமீசிந்வா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூலை 15ஆம் திகதி கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் நிமோனியாவினாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உகண்டாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது...
இதுவரை கொரோனாவால் மரணம் பதிவாகாத உகண்டாவில் முதலாவது மரணம் பதிவானது....
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment