நபர் ஒருவரின் மூக்கில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட 15 குளவிகள்
நேற்று (24/08/2020) மாலை குளவி கொட்டுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் மூக்கில் இருந்து 15 குளவிகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை ஹாலிஎல, கீனகெலே தேயிலை தோட்டத்தில் வைத்து குறித்த நபர் குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
குளவி கொட்டுக்கு உள்ளான நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவரின் மூக்கில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட 15 குளவிகள்
Reviewed by Author
on
August 25, 2020
Rating:

No comments:
Post a Comment