மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் 724 கிலோ கடல் அட்டை பொலிஸாரால் மீட்பு
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர பொலிஸ்பொறுப்பதிகாரி பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான ஊழல் தடுப்பு பிரிவினரே மேற்படி அனுமதி பத்திராம் இல்லாமல் 724 கிலோ 500 கிராம் கடலட்டைகள் மற்றும் அவற்றை உடமையில் வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்ற பட்ட கடலட்டைகள் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையிடம் ஒப்பட்டைக்கப்பட்டு மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி 50 இலட்சம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் 724 கிலோ கடல் அட்டை பொலிஸாரால் மீட்பு
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment