அண்மைய செய்திகள்

recent
-

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது!

தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வவுனியா வடக்கு – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. 

 ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த 17ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று (26) பத்தாம் நாள் இறுதி விழா இடம்பெற்றது. அந்தவகையில், ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூசை வழிபாடுகளுடன் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. 

 காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய பூசை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

 இதேவேளை, ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியை அண்டி இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

 பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன் அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது! Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.