ஆனமடுவ விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு.
அத்துடன், குறித்த சிறுமியின் தாயும், தந்தையும் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம பிரதேசத்தில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி கணவனும், மனைவியும் தமது 3 வயது பெண் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி உட்பட அச்சிறுமியின் தாயும், தந்தையும் அங்கிருந்தவர்களால் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கும், அச்சிறுமியின் பெற்றோர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த தாயும், தந்தையும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனமடுவ விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment