வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
இந்த சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது 65) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நவாலி பகுதியில் வயல் செய்துவரும் குறித்த வயோதிபர் நேற்று வயல் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இரவு ஆகியும் அவர் வீடு திரும்பாததால் குறித்த வயோதிபரை குடும்பத்தினர் தேடி உள்ளனர்.
எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வயல் வழியாகச் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் விழுந்து கிடப்பதை அவதானித்து உடனடியாக அப்பகுதி உள்ளவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அத்துடன் மானிப்பாய் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வயல் நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment