பிரான்ஸில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!
கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 13ஆயிரத்து 215பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 154பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை நான்கு இலட்சத்து 28ஆயிரத்து 696பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31ஆயிரத்து 249பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை மூன்று இலட்சத்து ஐந்தாயிரத்து 873பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 827பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை 91ஆயிரத்து 574பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
பிரான்ஸில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டது!
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment