மன்னாரில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
குறித்த 5 பேரும் வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பட்டிதோட்டம் பகுதியில் கட்டிட நிர்மாண வேலைக்கு என வருகை தந்த நபர்கள் குறித்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 5 பேருக்கு முதல் கட்டமாக 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஏனையவர்களுக்கான முடிவு இதுவரை வெளியாகவில்லை.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது வரை நிலமைகள் கட்டுப்பாட்டுகுள் இருப்பதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின் பற்றுவதுடன் காரணம் இன்றி வெளி நடமட்டத்தை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மன்னாரில் மேலும் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment