இந்திய,இலங்கை எல்லையில் கடற்படையினர் தாக்குதல்-ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயம்
மீனவர்கள் தனுஸ்கோடி ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.
இதனால் பல இலட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்ததால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் இரவோடு இரவாக கரை திரும்பினர்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(27) அதிகாலை மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை விசி எரிந்து மீண்டும் இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியதாக பாதீக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பூண்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் சுரேஸ் என்பவருக்கு இலங்கை கடற்படை வீசிய கற்கள் பட்டதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் மீன் பிடித்த கொண்டிருந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர்.
இதனால் படகு ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் காயமடைந்த மீனவர் சுரேஸ் பாதுகாப்பு வட்டாரங்களுக்கு அஞ்சி அதி காலையில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடுக்கு திரும்பி உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
.
.
இந்திய,இலங்கை எல்லையில் கடற்படையினர் தாக்குதல்-ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் படுகாயம்
Reviewed by Author
on
October 27, 2020
Rating:

No comments:
Post a Comment