ஹாத்ராஸ் வன்கொடுமை சம்பவம் : பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
சேதன் ஜனார்தன் தொடர்ந்த இந்த வழக்கில் ஹாத்ராஸ் வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் வகையில் செயல்பட்ட பொலிஸார், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகள் என மாநில அதிகாரிகளின் செயல் குற்றவாளிகளைக் காக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்து வைக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைவதற்கு முன்பே பல உயர் அதிகாரிகள் உயிரிழந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவில் காவல்துறையினரால் எரிக்கப்பட்டதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநில பொலிஸாருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையிலான தெளிவான உறவை குறிக்கிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹாத்ராஸ் வன்கொடுமை சம்பவம் : பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
Reviewed by Author
on
October 14, 2020
Rating:

No comments:
Post a Comment