மஸ்கெலியாவில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வேளையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடிய போது கிணற்றில் விழுந்து இருப்பதை கண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனையை திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!
Reviewed by Author
on
October 09, 2020
Rating:
Reviewed by Author
on
October 09, 2020
Rating:


No comments:
Post a Comment