அண்மைய செய்திகள்

recent
-

தாழமுக்கத்தினால் யாழில் அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயார்! மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ். மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

 மேலும் தெரிவிக்கையில், இன்று தொடக்கம் 24, 25ஆம் திகதி வரை மீனவர்கள் அவதானமாக கடலுக்குச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறக்கூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாகச் செயல்படவும். அதன்படி 24, 25ஆம் திகதிகளில் 100 - 150 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதோடு கடும் காற்று வீசும் எனவும் 24, 25ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை

முன்னெடுத்தல் அவசியம்.
தாழமுக்கத்தினால் யாழில் அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள தயார்! மாவட்ட அரசாங்க அதிபர் Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.