அண்மைய செய்திகள்

recent
-

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! எதேட்சையாக இடம்பெற்ற நெகிழ வைக்கும் சம்பவம்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையொன்று விவசாய நிலமொன்றில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், நேபாள எல்லை அருகேயுள்ள கட்டிமா எனும் கிராமத்தின் வயல்வெளியில் யாரோ ஒருவர் பிறந்த பச்சிளம் குழந்தையை துண்டுடன் சுற்றி அரைகுறையாக புதைத்து விட்டுச் சென்றுள்ளார்.

இதனை எதேட்சையாகப் பார்த்த ஒருவர் குழந்தையைப் பத்திரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். மீட்கப்பட்ட குழந்தை தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை! எதேட்சையாக இடம்பெற்ற நெகிழ வைக்கும் சம்பவம் Reviewed by Author on November 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.