அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு எரியூட்டி ஒன்று மாநகர முதல்வரால் வழங்கிவைக்கப்பட்டது

கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கிவரும் கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன் அவர்களால் தொற்றுக் கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மயூரன் அவர்களிடம் நேற்று (12.11.2020) கையளிக்கப்பட்டது.

 மினுவங்கொட கொத்தணியை கையாளும் விதமாக கரடியனாறு வைத்தியசாலை அவசர அவசரமாக குறைந்த வளங்களுடன் ஆரம்பிக்கப் பட்டது. அவற்றில் தொற்றுக் கழிவுகளை எரிக்கும் எரியூட்டியும் இல்லாமலே மாற்றுவழியுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் முகாமைத்துவம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சுகாதார திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மாநகர முதல்வரால் வழங்கிவைக்கப்பட்டது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரியூட்டிகளில் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு எரியூட்டி ஒன்று மாநகர முதல்வரால் வழங்கிவைக்கப்பட்டது Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.