அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. 

.1) ராஜகிரியவைச் சேர்ந்த 51 வயது ஆண். இவர் 07.11.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். இவருக்கு கொரேனாவுடன் நிமோனியா காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

 2) கொழும்பு- 10 இல் வசிக்கும் 45 வயது ஆண். அவர் 23.10.2020 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இறந்தார். சுவாச தொகுதியில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக இறந்தார்.

 3) கம்பஹாவில் உள்ள உடுகம்பொலா பகுதியில் வசிக்கும் 63 வயது பெண். அவர் 09.11.2020 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு இறந்தார். மரணத்திற்கு முக்கிய காரணம் கொவிட் அதனுடன் நிமோனியா காய்ச்சல்.

 4) 55-60 வயதுக்கு இடைப்பட்ட அடையாளம் தெரியாத ஆண். பிரேத பரிசோதனைக்கு உடல் 08.11.2020 அன்று பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கொவிட்-19 இனங்காணப்பட்டது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு Reviewed by Author on November 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.