அண்மைய செய்திகள்

recent
-

ஹெரோயினுடன் ஐவர் கைது

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ஜின்னா நகர், ஆலிம் நகர், பெரியபாலம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் பாவிக்க முற்படும் போது திருகோணமலை சர்தாபுர விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 கைதுசெய்யப்பட்ட ஐவரிடமிருந்து இரண்டு கிராம் இருபது மில்லிகிராம் ஹெரோயின் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயினுடன் ஐவர் கைது Reviewed by Author on November 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.