அண்மைய செய்திகள்

recent
-

பாரிஸில் கொடூரக் கொலை! சரமாரியான வெட்டுக் காயங்கள் - தீவிர விசாரணையில் பொலிஸார்

பிரான்ஸின் மத்திய பாரிஸ் நகரில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில், பாரிஸ் - முதலாம் வட்டாரத்தில் உள்ள Forum des Halles இல் அதிகளவு மக்கள் கூட்டம் இருந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்கள் அலறி ஓடினர். 

 47 வயதான ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ள நிலையில் அவரின் உடலில் 30இற்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் கொடூரக் கொலை! சரமாரியான வெட்டுக் காயங்கள் - தீவிர விசாரணையில் பொலிஸார் Reviewed by Author on November 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.