அண்மைய செய்திகள்

recent
-

நாங்கள் அனைவரும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்து தீபத்திருநாளை கொண்டாடுவோம்-செல்வம் அடைக்கலநாதன்

இருள் அகன்று,ஒளி பிறக்கும் நாளாய், தீமைகள் அகன்று, நன்மைகள் சிறக்கும் நன்னாளாய் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை, இலங்கையிலும், உலகெங்கிலும் கொண்டாடும் தமிழ் உறவுகள் அனைவருடனும் எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

 அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,, நாம் எதிர் நோக்கியிருக்கும் இக்கட்டான இச் சூழ்நிலையில் எமது பாதுகாப்பினை நாங்களே உறுதிப்படுத்த வேண்டியிருக்கின்றது. எனவே கொரோனா வைரஸில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி தேவையற்ற பயணங்களை தவிர்த்து அமைதியாக வீடுகளில் இருந்து தீபத் திருநாளை கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தீபாவளி திருநாளை, இலங்கையிலும், உலகெங்கிலும் கொண்டாடும் தமிழ் உறவுகள் அனைவருடனும் எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.என குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாங்கள் அனைவரும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்து தீபத்திருநாளை கொண்டாடுவோம்-செல்வம் அடைக்கலநாதன் Reviewed by Author on November 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.