அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2020 ஆம் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் திறந்து விடும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) காலை 9.45 மணியளவில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது சர்வமத தலைவர்களின் ஆசியோடு,மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது.

 குறித்த நிழ்வில் விவசாயிகள், கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள்,மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர்,நீர் பாசன பொறியியலாளர்,நானாட்டான பிரதேச சபையின் உப தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கால போக விவசாய நெற்செய்கைக்கான நீரை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விவசாயிகள் பொங்கல் பொங்கி மகிழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.










மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் வைபவ ரீதியாக திறந்து வைப்பு. Reviewed by Author on November 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.