அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா- திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியா- திருநாவற்குளத்தில் 4பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ம் திகதி இவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டிருந்தது. 

 அதில் அவர்களிற்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வவுனியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வவுனியாவில் பல இடங்களிலும் பி .சி. ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே, திருநாவற்குளம் பிரதேசம் முடக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா- திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று! Reviewed by Author on December 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.