அண்மைய செய்திகள்

recent
-

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் பலி!

தனது நான்கு வயது குழந்தையை எரிபொருள் தொட்டி மீது வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில குறித்த குழந்தையும் தந்தையும் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தார். மிரிஹான சாலாவ வீதியை சேர்ந்த பிரதீப் உதய குமார (32) மற்றும் அவரது மகன் சதெவ் அபிராஸ் (வயது 4) ஆகியவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துளளனர். 

 இவர்கள் பிலியந்தலை தம்பே பிரதேசத்தில் வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ள நிலையில் இன்று காலை குழந்தையை பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரனை - கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் இரண்டு மருங்குகளை பிரிப்பதற்காக வீதியின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பாரிய பூச்சாடியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ள நிலையில், விபத்தில் காயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன் பலி! Reviewed by Author on December 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.