அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பத்து லட்சம் பெறுமதியான வீதியை காணவில்லை

மன்னார் மூர் வீதி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைதீவு ஒருங்கிணப்பு குழு தலைவருமான காதர்மஸ்தானின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட வீதியை காணவில்லை என குறித்த மன்னார் மூர்வீதி பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 குறித்த வீதியானது 10 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டில் கடந்த 8 மாதம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வீதி மற்றும் வீதிக்கு என பறிக்கப்பட்ட கிறவல் போன்றவற்றை காணவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 குறித்த வீதியானது ஒழுங்காக அமைக்கப்படவில்லை எனவும் மூன்று மாத காலப்பகுதியில் காணமல் போயுள்ளதாகவும் தற்போது குறித்த வீதியில் கொக்குகள் மீன் பிடித்து கொண்டு இருப்பதாகவும் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு குறித்த வீதியை புணரமைத்து வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மன்னாரில் பத்து லட்சம் பெறுமதியான வீதியை காணவில்லை Reviewed by Author on December 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.