பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம்
குறிப்பாக பிரித்தானியா போன்ற நாட்டிலிருந்து நபர்கள் வருகைத்தரும்போதும் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்போதும் அந்த வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது இந்த வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் இந்தியா, தென்னாபிரிக்கா, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரித்தானியாவுக்கான விமானப் பயணங்களை இரத்து செய்துள்ளன.
இதனிடையே கொரோனா வைரஸின் இந்த புதிய உருமாற்றம் அவுஸ்ரேலியா, டென்மார்க் முதலான நாடுகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம்
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment