கொரோனா தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி
அந்த தடுப்பூசிகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாக, அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும் இடங்கள் மற்றும் ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி
Reviewed by Author
on
December 25, 2020
Rating:

No comments:
Post a Comment