அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு அவற்றைப் பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டார். 

 பண்டிகை காலங்களில் பயணத்தை குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்யவும். அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்.

# பண்டிகை காலங்களில் குடும்பம் அல்லது நட்பு கூட்டங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுடன், அத்தகைய கூட்டங்களை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தவும். 

# பண்டிகை காலத்திற்காக ஏனையவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உடல் ரீதியான தொடர்பிலிருந்து விலகி இருக்கவும் அனைத்து நேரங்களிலும் சமூக தூரத்தை பராமரிக்கவும். 

# வயதானவர்கள் வேகமாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று கூறிய சுகாதார பணிப்பாளர், குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை பெரிய கூட்டத்திற்கு வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் வெளிநபர்களின் வருகையை மட்டுப்படுத்தவும். 

# தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது இடங்களில் சமூக தூரத்தை பராமரிக்கத் தவறும் நபர்களுக்கு அல்லது சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறும் நபர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்த பொதுமக்களுக்கு உரிமை உண்டு. 

# பண்டிகை காலங்களில் பொருட்களை வாங்குவதற்கு கிடைக்கக்கூடிய ஒன்லைன் விநியோக சேவைகளைப் பயன்படுத்தவும். 

# இந்த காலகட்டத்தில் வெளிச் செல்லும்போது முகக் கவசம் அணியவும். சமூக தூரத்தை பராமரிக்கவும். தொடர்ந்து கைகளை கழுவவும் அல்லது சுத்தப்படுத்தவும்.

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு! Reviewed by Author on December 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.