அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன் சம்பவ இடத்திலேயே முகநூல் காதலிக்கு அனுப்பிய SMS! சுவாரஸ்ய சம்பவம்

வவுனியா வைரவபுளியங்குளச்சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் சுவாரஸ்ய தகவலொன்று வெளியாகியுள்ளது. வவுனியா நகரிலிருந்து குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்,வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு நேற்று முன்தினம் (13) விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த விபத்தில் இருசக்கர வாகனத்தை வேகமாக செலுத்திவந்த இளைஞன் தொலைபேசியிலேயே முக்கிய கவனம் செலுத்திக்கொண்டு வந்ததாக தெரிவிக்கபப்டுகிறது. 

 கடந்த சில தினங்களுக்குமுன் வவுனியாவை சேர்ந்த குறித்த இளைஞன் முகநூலுடாக வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையில், இருமுறை அந்த பெண்ணை நேரில் சந்திக்க முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக காதலியை சந்திக்க நேற்றையதினம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனால் இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என எண்ணிய இளைஞர் அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தை செலுத்திக்கொண்டு, தொலைபேசி அழைப்பு வருமோ என்ற எண்ணத்தில் சென்று விபத்தை ஏற்படுத்தி காயமடைந்துள்ளார். 

 தொடர்ந்து பொது மக்கள் நோயாளர் காவு வண்டியை அழைத்த நிலையில் சம்பவவிடத்திற்கு நோயாளர்காவு வண்டி விரைந்துவந்த நிலையில் ஊழியர்கள் நோயாளர்காவு வண்டியில் ஏற்ற தூக்க முற்பட்ட போது, பொறுங்க நான் விபத்துக்குள்ளாகிவிட்டேன் என காதலிக்கு ஒரு SMS அனுப்பிவிட்டு வருகிறேன் என கூறியதால் ஊழியர்கள் கோபமடைந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன் சம்பவ இடத்திலேயே முகநூல் காதலிக்கு அனுப்பிய SMS! சுவாரஸ்ய சம்பவம் Reviewed by Author on December 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.