அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழப்பு

கொழும்பு- லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் பதிவாகியுள்ளது. கொரோனாவினால் இலங்கையில் உயிரிழக்கும் இரண்டாவது மிக இளைய குழந்தை இதுவாகும். மேலும், இந்த குழந்தையின் உடலும் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

 இதேவேளை கடந்த டிசம்பர் 8ஆம் திகதி, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த குழந்தையின் உடலும் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்தனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழப்பு Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.