அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வினியோகம்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை பகுதியில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வை.எம்.எம்.ஏ. அமைப்பின் ஊடாக முசலி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து இன்று புதன் கிழமை (9) காலை வழங்கி வைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் முசலி வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் சார்ள்ஸ், முசலி பொது சுகாதார பரிசோதகர்கள், வை.எம்.எம்.ஏ.அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் ஏ.எம்.சபீர், வை.எம்.எம்.ஏ. அமைப்பின் வேப்பங்குளம் கிளைத் தலைவர் ஏ.எஸ்.எம்.பௌசி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் குறித்த உலர் உணவு பொதிகள் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கொண்டு சென்று வினியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வினியோகம் Reviewed by Author on December 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.