அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2 ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

மண் வாசனை அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

 சகல விதமான பாதிப்புகளுக்கும் உள்ளான 71 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக நேற்று சனிக்கிழமை 30 குடும்பங்களுக்கு 1974 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

 அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் 25 குடும்பங்களுக்கு 1974 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. மண் வாசனை அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
            







மன்னாரில் 2 ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on December 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.