வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்தவர்கள் மீது பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
அதன் முடிவுகள் எதிர்மறையானதாக இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு வீடு திரும்புவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
Reviewed by Author
on
December 10, 2020
Rating:
Reviewed by Author
on
December 10, 2020
Rating:


No comments:
Post a Comment