அண்மைய செய்திகள்

recent
-

பதுளையில் புதையல் தோண்டிய 14 பேர் கைது!

பதுளை கொஸ்லாந்தை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 14 பேரை, கொஸ்லாந்தை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், தும்மல்ஹார என்ற இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 14 பேரையும் கைது செய்தனர்.

 அத்துடன், புதையல் தோண்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 14 பேரும், ஊவா – மாவெலகமைச் சேர்ந்த ஒக்பீல்ட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் விசாரணையின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்களென, கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பதுளையில் புதையல் தோண்டிய 14 பேர் கைது! Reviewed by Author on January 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.