விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் அறிமுகம்
இதனையடுத்து, விண்வௌியில் இருந்து எடுக்கப்படும் படங்களை விஞ்ஞானிகள் ஆப்பிரிக்க யானைகளைக் கணக்கிட பயன்படுத்துகின்றனர்.
புவியின் மேற்பரப்பிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தன் சுற்றுவட்டப் பாதையில் புவியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களிலிருந்து இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த தொழில்நுட்பத்தால், மேக மூட்டம் இல்லாத ஒரு நாளில், 5,000 சதுர கிலோமீட்டம் தூரம் வரை யானைகளின் வாழ்விடத்தை கணக்கிடுவதற்கு முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
யானை எண்ணும் பணிகள் இயந்திர கற்றல் (Machine Learning) மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் பணிகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் அறிமுகம்
Reviewed by Author
on
January 22, 2021
Rating:

No comments:
Post a Comment