அண்மைய செய்திகள்

recent
-

58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனம்!

தற்போதைய அரசாங்கம் 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அவர்கள் ஒரு வருட கால பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 பயிற்சிக்காலத்தில் ரூபாய் 20,000 கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பயிற்சி காலம் நிறைவடைந்ததும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனம்! Reviewed by Author on February 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.