அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா மரணங்கள் 433 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மாத்தளை, கலகெட்டிஹேன மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளை சேர்ந்த 87, 73 மற்றும் 63 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். 

 இதற்கமைய, நாட்டில் COVID தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, COVID தொற்றுக்குள்ளான 506 பேர் நேற்று அடையாளங்காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

 இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 78,937 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் மேலும் 743 பேர் நேற்று குணமடைந்தனர். அதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 72,566 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5,941 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா மரணங்கள் 433 ஆக அதிகரிப்பு Reviewed by Author on February 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.