பொத்துவில் போராட்டம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதி மன்றம் தடை
மன்னார் பொலிஸார் மன்னார் நீதி மன்ற நியாதிக்க எல்லைக்கு உற்பட்ட பகுதிக்குள் குறித்த பவனியானது உள் நுழைவதையும் ,எதிர் வருகின்ற சுதந்திர தினத்தையும் அல்லது இன ஒன்றுமையை குழப்புகின்ற வகையிலும் இன முரண்பாட்டை தோற்று விக்கின்ற வகையிலும் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அதற்கான ஏற்பாடுகள் மன்னார் மாவட்டத்திற்குள்ள செய்யக்கூடது என்ற தடையுத்தரவினை கோரி 14 நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்து கட்டளையினை பெற்றுள்ளனர்.
இத்தடை உத்தரவானது இன்று 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையானது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் மாநகர சபை மேஜர் மணிவன்னன் யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 நபர்களுக்கு எதிராக இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கானது இன்றைய தினம் புதன் கிழமை (3) மன்னார் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டு சமர்பணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த சமர்பணமானது பொது தொல்லையாக எற்படுவதாகவும் கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கட்டளை கோரியிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் குறித்த கட்டளைக்கு எதிராக வெறுமனே ஊகத்தின் அடிப்படையில் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் விதிகளை கடந்து போராட்டங்கள் மேற்கொள்வது ஜனநாயக உரிமை எனவும் இது அரசியல் அமைப்பில் அங்கிகரிக்கப்பட்ட உரிமை எனவும் சட்டத்தரணிகளினால் மன்றில் அட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
எனினும் பொலிஸாரால் கோரப்பட்ட கட்டளை மன்னார் நீதவான் நீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் போராட்டம் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதி மன்றம் தடை
Reviewed by Author
on
February 03, 2021
Rating:
Reviewed by Author
on
February 03, 2021
Rating:



No comments:
Post a Comment