யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியொருவருக்கும் கொரோனா தொற்று!
இந்நிலையில், அவர்கள் இருவர் உட்பட சிலரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டுள்ள நிலையில், பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டிருந்தது.
குறித்த வைத்தியர் கொழும்புக்குச் சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, தாமே முன்வந்து பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்த நிலையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியொருவருக்கும் கொரோனா தொற்று!
Reviewed by Author
on
February 23, 2021
Rating:

No comments:
Post a Comment