மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், மணிக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியின் நகர்வுகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியான அவதானத்தை செலுத்தி வருவதால், இது தொடர்பாக திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
Reviewed by Vijithan
on
February 18, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 18, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment