ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது
சந்தேக நபரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.
சந்தேக நபர், போதைப்பொருள் கடத்திலில் ஈடுபடுவதுடன் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது
Reviewed by Author
on
March 20, 2021
Rating:

No comments:
Post a Comment