அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் கடினபந்து சுற்று போட்டி ஆரம்பம்

மன்/சித்தி விநாயகர் இந்து கல்லூரியின் நிறுவனர் குமரையா முத்துக்குமார் அவர்களின் நினைவாக சித்தி விநாயகர் விளையாட்டு கழகம் எற்பாடு செய்துள்ள 10 அணிகளை கொண்ட கடின பந்து கிறிக்கட் சுற்று போட்டியின் ஆரம்ப நிகழ்வு சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் தலைவர் பஞ்சனாதன் கரன் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை 12 மணியளவில் நானாட்டன் பொது மைதானத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

 குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 10 உள்ளூர் அணிகள் கலந்து கொள்வதுடன் 30 ஓவர்களை கொண்ட லீக் போட்டியா சனி ஞாயிறு தினங்களில் குறித்த போட்டி இடம் பெறவுள்ளது

 குறித்த சுற்று போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மன் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பிரதி அதிபர் திரு.மயூரன் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளர் திரு. லூர்த்து நாயகம் பிள்ளை, முருகன் கோவில் குருக்கள் சிவ சிறி மகா தர்ம குமார குருக்கள், மன்னார் மாவட்ட கடின பந்து சபையின் தலைவர் பர்னாந்து அருள் உட்பட போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்



















மன்னார் சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் கடினபந்து சுற்று போட்டி ஆரம்பம் Reviewed by Author on March 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.