சீனாவை தாக்கிய மணல் புயல்!
பெய்ஜிங்யில் காற்றின் மாசுப்பாட்டின் அளவு 500 புள்ளிகளை கடந்துள்ளது. மேலும் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுபாட்டின் அளவு 8,000 மைக்கிரோ கிராமாக உள்ளது.
சராசரியாக சிறந்த காற்றின் அளவு 0 முதல் 50 புள்ளிகளாக ஆக இருக்க வேண்டும் மற்றும் தூசியின் அளவு 50 மைக்கிரோ கிராமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது சீனாவில் வீசி வரும் மணல் புயலால் காற்றில் மாசின் அளவு ஆபாயகட்டத்தை எட்டியுள்ளது.
எல்லா ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் மணல் புயல் ஏற்படுவது வழக்கம். ஆனால் இதுபோல் ஒரு மாபெரும் புயல் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டது இல்லை என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காடுகள் அழிக்கபடுவதாலும் மணல் அரிப்பின் காரணமாகவும் இதுபோன்ற இயற்கை சீற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவை தாக்கிய மணல் புயல்!
Reviewed by Author
on
March 15, 2021
Rating:

No comments:
Post a Comment