அண்மைய செய்திகள்

recent
-

கங்கையில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்

மஹவெல பொலிஸ் பிரிவின் ஹன்கந்த மின் ஆலைக்கு அருகில் கங்கையில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நேற்று (11) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

 மஹவெல பொலிஸிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன நபர்களை தேடி வருகின்றனர். 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் மற்றும் 26 வயதுடைய தலுபொதகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கங்கையில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம் Reviewed by Author on March 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.