கிளிநொச்சியில் வீட்டு வாசலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துசியந்தன் (வயது 32) என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இந்தக் கொலைச் சம்பவத்தடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் வீட்டு வாசலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!
Reviewed by Author
on
March 11, 2021
Rating:

No comments:
Post a Comment