அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு - பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு

வட்டவளை தொடக்கம் மவூண்ட்ஜின் வரையிலான ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்று வருவதால் அப்பிரதேச சூழல் பாதிப்படைவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வட்டவளை ரொசல்ல ரயில் நிலையத்திலிருந்து மவூண்ட்ஜின் தோட்டம் வரையான ஹட்டன் ஓயா பகுதியிலே இவ்வாறு தொடர்ந்து மாணிக்ககல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் அதிகளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளதுடன் மண்ணரிப்பு ஏற்படுவதால் சூழல் மாசடைவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 அத்தோடு வெளிப்பிரதேசத்தவர்களின் வருகையும் அதிகரித்துள்ளதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென தெரிவிப்பதுடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகே விடம் வினவிய போது வட்டவளை பிரதேசதேசத்தில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனியும் இவ்வாறான சட்டரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு - பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு Reviewed by Author on March 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.